sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்

/

 இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்

 இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்

 இனியும் டில்லி, தமிழகம் என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் திட்டவட்டம்

6


UPDATED : மார் 22, 2026 05:33 AM

ADDED : மார் 22, 2026 04:08 AM

Google News

6

UPDATED : மார் 22, 2026 05:33 AM ADDED : மார் 22, 2026 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “இனியும் டில்லி, தமிழகம் என பேசி, மக்களை, முதல்வர் ஸ்டாலின் ஏமாற்ற முடியாது,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினரகன், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்பு குறித்து, தினகரன் அளித்த பேட்டி:

டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, பீயூஷ் கோயல் ஆகியோரை சந்தித்தேன். பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றதோ, அதுபோல, தமிழக சட்டசபை தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வெற்றி பெறுவது குறித்து பேசினோம்.

அமித் ஷா ஒவ்வொரு முறையும் சென்னை வர முடியாது. அதனால், டில்லி வந்து பேசுகிறோம். அதேபோல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியிருக்கலாம்; எனக்கு தெரியாது. ஆனால், நாங்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக, அமித் ஷாவிடம் எதுவும் பேசவில்லை.

மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி தரவில்லை என, முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது. இதை, முறையாக பயன்படுத்தவில்லை. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில், தே.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான் தலைமை தாங்குகிறது. ஆனால், 'தேர்தல் டில்லிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையேயான தேர்தல்' என, ஸ்டாலின் பேசி வருகிறார். இனியும் டில்லி, தமிழகம் என பேசி, மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து, அ.ம.மு.க., போட்டியிட்டதால், தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இந்த நிலைமை, இந்த தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதற்காக, தே.ஜ., கூட்டணியில் இணையுமாறு அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனை அமித் ஷா வலியுறுத்தினார். அதை ஏற்று, கூட்டணியில் இணைந்த தினகரன், அதன்பிறகு, அமித் ஷாவை சந்திக்கவில்லை. தற்போது, மேற்காசிய நாடுகளில் போர் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விவகாரம் உள்ளிட்டவை குறித்த உயர்மட்ட கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்க வேண்டியுள்ளது. அவரால், தமிழகம் வர முடியாத சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி உறுதியான நிலையில், கூட்டணியை உருவாக்கிய அமித் ஷாவுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவே, தினகரன் டில்லி சென்றார். இதே காரணத்திற்காக தான், பா.ம.க., தலைவர் அன்புமணியும் டில்லி சென்றார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. ***








      Dinamalar
      Follow us