sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 கம்ப்யூட்டரை 'ஆன்' செய்து விட்டு காணாமல் போகும் தமிழக காங்கிரசார்

/

 கம்ப்யூட்டரை 'ஆன்' செய்து விட்டு காணாமல் போகும் தமிழக காங்கிரசார்

 கம்ப்யூட்டரை 'ஆன்' செய்து விட்டு காணாமல் போகும் தமிழக காங்கிரசார்

 கம்ப்யூட்டரை 'ஆன்' செய்து விட்டு காணாமல் போகும் தமிழக காங்கிரசார்


ADDED : டிச 28, 2025 04:06 AM

Google News

ADDED : டிச 28, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட உள்ளதால், மேலிட பொறுப்பாளர்கள் நடத்தும், 'ஜூம் மீட்டிங்'குகளில், மாவட்ட தலைவர்கள் தலையை காட்டிவிட்டு, 'எஸ்கேப்' ஆகி விடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், சிறப்பாக செயல்படுவோரை மட்டுமே மாவட்ட தலைவர்களாக நியமிக்கவும், 'சங்கதன் ஸ்ரீஜன் அபியான்' திட்டத்தை, நாடு முழுதும் காங்கிரஸ் கட்சி செயல் படுத்தி வருகிறது.

இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அத்திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சரிவர பணி செய்யாத மாவட்ட தலைவர்களை மாற்றி விட்டு, புதிய தலைவர்களை தேர்வு செய்துள்ளனர்.

அந்த பட்டியல், டில்லி மேலிடத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

இதற்கிடையில், எந்தெந்த அரசியல் கட்சிகள், எவ்வளவு ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்துஉள்ளது என்ற விபரங்களை, கடந்த சில நாட்களாக தேர்தல் கமிஷன் வெளியிட்டு வருகிறது.

கடந்த 21ம் தேதி வெளியிட்ட அந்த பட்டியலில், பா.ஜ., - தே.மு.தி.க.,வுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75 ,000 ஓட்டுச்சாவடிகளில், 27,000 முகவர்கள் தான் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி கேட்கும் நிலையில், ஓட்டுச்சாவடி முகவர்களைக்கூட சரவர நியமிக்கவில்லை என்ற குறைபாடு இருக்கக்கூடாது என அவர்கள் கருதினர்.

அதனால், கடந்த ஒரு வாரமாக, காலை, மாலை, இரவு என, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும், 'ஜூம் மீட்டிங்' நடத்தப்பட்டு வருகிறது.

'ஜூம்' எனும் செயலியை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் , தமிழக காங்.,கின் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்பதில்லை; திட்டமிட்டே சிலர் புறக்கணித்து வருகின்றனர்.

பங்கேற்கும் சில மாவட்ட தலைவர்களும், கம்ப்யூட்டரை இயக்கி, மீட்டிங் துவங்கியதும் தலையை காட்டிவிட்டு மறைந்து விடுகின்றனர்.

மீட்டிங்கில் ஏன் தொடர்ந்து பங்கேற்பதில்லை என கேட்டால் , 'கூட்டத்தில் பூத் ஏஜென்ட்களை நியமிக்க சொல்லித்தான் வலியுறுத்துகின்றனர். எங்கள் பதவி காலமே விரைவில் முடிவடைய உள்ளது.

'அப்படி இருக்கும்போது, நாங்கள் ஏன் கட்சிக்காக கைக்காசை செலவழிக்க வேண்டும்? கைக்காசை செலவிட்டு பூத் ஏஜென்ட்களை நியமிப்பதால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்' என கேட்கின்றனர்.

இதற்கிடையில், இதுவரை ஓட்டுச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்ட 27,000 பேர் கூட போலியாக இருக்கலாம் என மேலிட பொறுப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

கட்சி இந்த லட்சணத்தில் இருக்கும்போது, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தி.மு.க., எப்படி ஏற்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால், கூட்டணி விஷயத்தில் தமிழக காங்கிரசுக்குள் குழப்பமான நிலையே நீடிக்கிறது என தமிழக காங்., வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us