sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

/

தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

தமிழ் வளர்த்த மதுரைக்கு சோதனை; அ, ஆ தெரியாத 22,000 பேர்

4


ADDED : ஜூன் 07, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:25 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் எழுத படிக்க தெரியாதவர்கள், 22,768 பேர் என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அ... ஆ... கற்பிக்க 1,644 தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை களம் இறக்க கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது.

மதுரையை, 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றும் வகையில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் எழுதப் படிக்க தெரியாதவர்கள் குறித்து, இம்மாதம் முதல் கணக்கெடுக்கும் பணியை துவங்கிஉள்ளது.

இதுகுறித்த விபரம் கல்வித்துறை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 22,766 பேர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என, பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கும் பணியை ஜூன் 10 வரை, இயக்கக மாநில திட்ட இயக்குனர் நாகராஜ முருகன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கணக்கெடுப்பு பணிகளை சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.

இதுகுறித்து சி.இ.ஓ., கூறியதாவது: கணக்கெடுக்கும் பணியிலும், அ, ஆ கற்பித்தல் பணிக்கும் 1,644 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக நுாறு நாள் வேலைத் திட்டம், தொழிலாளர்கள் நலவாரியம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகிய இடங்களில் கையெழுத்திற்கு பதில் கைரேகை பதிவு செய்யும் அனைவரும் கணக்கெடுக்கப்படுகின்றனர்.

யாரும் விடுபடக்கூடாது என கலெக்டரும் உத்தரவிட்டுள்ளார். எழுத்தறிவு கல்வியை பெற விரும்புவோர் அருகில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகளை அணுகலாம். விரைவில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மதுரை மாற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us