sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

/

10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

11


UPDATED : பிப் 16, 2025 12:28 PM

ADDED : பிப் 16, 2025 04:43 AM

Google News

UPDATED : பிப் 16, 2025 12:28 PM ADDED : பிப் 16, 2025 04:43 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கடந்த, 10 ஆண்டு களாக, தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்து வருகின்றன,'' என கவர்னர் ரவி பெருமையாக கூறினார்.

மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை சமீபத்தில் அறிவித்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன.அவர்களுக்கான பாராட்டு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு, கவர்னர் ரவி சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

பத்ம விருதுகள் பெற உள்ள, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திர குமார், குருவாயூர் துரை, தாமோதரன், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவசேனாபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நடிகர் அஜித்குமார் பங்கேற்கவில்லை; கிரிக்கெட் வீரர் அஸ்வின் சார்பாக, அவரது பெற்றோர் பங்கேற்றனர்.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

பத்ம விருது பெறுவோரோடு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வாகி உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் சார்ந்த துறைகளுக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர்.

அவர்கள் கடினமாக உழைத்ததால், இந்த இடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த விருது

பெறுபவர்களால், நம் நாடே பெருமை அடைகிறது.

விருது பெற உள்ளவர்களின் பங்களிப்பு, நாட்டுக்கும், மக்களுக்கும், பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் தகுதியான நபர்களுக்கு கிடைத்து வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பத்ம விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன், விருதுகளை வழங்கி வருகிறது.

அரசு சாராத நடுவர் குழு வாயிலாக, விருதுகள் வழங்கப்படுவது பெருமைக்குரியது. இதனால், சமூகத்தில் வெளியில் தெரியாமல், சிறப்பாக சேவை செய்பவர்களை, மத்திய அரசு தேடிக் கண்டறிந்து, பத்ம விருதுகளை வழங்க முடிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

'நெறிமுறையை பின்பற்றுபவர்'

ஆர்.லட்சுமிபதிக்கு பாராட்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி குறித்து, கவர்னர் ரவி கூறியதாவது:நிகழ்காலத்தில், வர்த்தக பொருளாதார உலகில், எப்படியும் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. அதற்காக, சிலர் நெறிமுறைகளையும், மதிப்புகளையும் புறக்கணிக்கின்றனர். ஆனால், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர். லட்சுமிபதி அப்படி செய்யவில்லை. மக்கள் உண்மையை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், எதற்கும் ஒரு போதும், தன் பத்திரிகை நெறிமுறையை துறக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்வித்து, விளம்பரங்கள் பெற வேண்டும் என்று நினைக்காமல், மக்களிடம் உண்மையை முன்வைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிகையைச் சேர்ந்த அவரை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.








      Dinamalar
      Follow us