sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'

/

'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'

'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'

'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை'

6


ADDED : ஜூலை 05, 2025 02:45 AM

Google News

6

ADDED : ஜூலை 05, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:


தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. காவல் துறையை, தலைமை செயலகத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர்.

திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மீதான புகாரில், வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் அவரை அடித்து கொலை செய்துள்ளனர். முதல்வர் ஈசியாக 'ஸாரி' என்று சொல்கிறார்.

புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக, தலைமை செயலகத்தில் இருந்து போன் செய்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமாரின் குடும்பத்திற்கு, குறைந்தது 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்த, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கில், இன்னும் தீர்வு வரவில்லை. அண்ணா பல்கலை வழக்கில் ஞானசேகரனுக்கு, ஐந்து மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துவிட்டது.

சாத்தான்குளம் வழக்கை தாமதம் செய்வது ஏன்? இதை எல்லாமல் மறைக்கவே, ஓரணியில் திரள்வோம் என்று பிரசாரம் செய்கின்றனர்.

தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார். தமிழக வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் முதல்வர் எதுவுமே செய்யாததைத்தான் குறை சொல்கிறோம்.

இனி எல்லா போராட்டங்களிலும் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து செயல்படும். கூட்டணிக்கு விஜய் வருவது குறித்து கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன; நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us