sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பரளிக்காடு, பூச்சி மரத்துாருக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

/

பரளிக்காடு, பூச்சி மரத்துாருக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

பரளிக்காடு, பூச்சி மரத்துாருக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

பரளிக்காடு, பூச்சி மரத்துாருக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்


UPDATED : அக் 01, 2024 05:30 AM

ADDED : செப் 30, 2024 11:27 PM

Google News

UPDATED : அக் 01, 2024 05:30 AM ADDED : செப் 30, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதையடுத்து, பரளிக்காடு மற்றும் பூச்சு மரத்தூர் சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https://Coimbatore wilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தான் வரவேண்டும். நேரடியாக வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.

பரளிக்காடு சூழல் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது.

இதனை நம்பி பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட பரிசல் இயக்குபவர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் உள்ளனர்.

தற்போது பள்ளிகளில் விடப்பட்டுள்ள காலாண்டு விடுமுறை காரணமாக பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பரளிக்காடு சூழல் சுற்றுலா போல், காரமடை வனச்சரகத்தில் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா மையமும் உள்ளது. இங்கு தங்கும் விடுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு 3 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் தலா 8 பேர் என மொத்தம் 24 பேர் வரை தங்க முடியும். ஒரு நபருக்கு ரூ.2,300 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், பேக்கேஜ் கட்டணம் அண்மையில் நீக்கம் செய்யப்பட்டது. அதன் படி, விடுதி கட்டணம் மட்டும் ரூ.1,000 செலுத்தி பூச்சமரத்தூரில் தங்கலாம்.

இதையடுத்து தற்போது தங்கும் விடுதிகளில் புக்கிங் அதிகரித்துள்ளது. இந்த மாதம் இதுவரை சுமார் 32 புக்கிங்கிற்கு மேல் சென்றுள்ளது.






      Dinamalar
      Follow us