sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

/

குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

9


UPDATED : ஜன 05, 2024 10:30 AM

ADDED : ஜன 05, 2024 04:26 AM

Google News

UPDATED : ஜன 05, 2024 10:30 AM ADDED : ஜன 05, 2024 04:26 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜெயபால். ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நிலஉரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.

தன் கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் அவரது கணவர் ஜெயபால். இவர்களின் செயலை பாராட்டும் விதமாக இருவரும் இந்த ஆண்டு புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடக்கும் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக கலந்து கொள்கின்றனர்.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது.

இவர்கள் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் ஜனாதிபதி வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us