தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/டிரம்ப் கோமாளித்தனங்களுக்கு ஒரேடியாக முடிவு வரும்.. அந்துமணி பதில்கள்

டிரம்ப் கோமாளித்தனங்களுக்கு ஒரேடியாக முடிவு வரும்.. அந்துமணி பதில்கள்

டிரம்ப் கோமாளித்தனங்களுக்கு ஒரேடியாக முடிவு வரும்.. அந்துமணி பதில்கள்

6


UPDATED : செப் 11, 2026 02:46 PM

ADDED : செப் 11, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

6

UPDATED : செப் 11, 2026 02:46 PM ADDED : செப் 11, 2026 05:53 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வ.முருகன், விழுப்புரம்

சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட எந்தவொரு வான்வெளி பொருட்கள் மீதும், எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது வலைதள பக்கத்தில், 'நிலவு எங்களுடையது' என, பதிவிட்டுள்ளாரே?



அப்படியே, 'சூரியன் எங்களுடையது' எனக் கூறி, ஒரு ராக்கெட்டில் ஏறி அவர் சென்று பார்க்கட்டும்; அவரது கோமாளித்தனங்களுக்கு ஒரேயடியாக முடிவு வரும்!

என்.சம்பத், சென்னை

கேரள மாநிலத்தைப் போல், தமிழகத்திலும் லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வந்தால், நிதி நிலைமை சீராகாதா?



லாட்டரி என்பது புதை மணல்; சிக்கிக் கொண்டால் மீளவே முடியாது. லாட்டரியால் தமிழக மக்கள் அவதிப்பட்டது போதாதா... மீண்டும் சிக்க வேண்டுமா சம்பத்!

பா.ஜெயகுமார், வந்தவாசி

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில், ஏதாவது ஒன்றில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, சட்டசபைக்குள் நுழையலாமே... என்ன தயக்கம்?



வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் விஜயை, 'மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...' என, பேசியாக வேண்டுமே... மனம் ஒப்புமா?

நெல்லை குரலோன், தென்காசி

'தி.மு.க.,வுடன் உறவு அறுந்து விட்டது என்ற பேச்சுக்கே, அரசியலில் இடமில்லை; அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்ப, நிலைப்பாட்டை மாற்றுவது வழக்கம் தான்...' என்று, 'பல்டி' அடித்திருக்கிறாரே, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ?



அவரது பாணி அரசியலுக்கு, தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் வைகோ!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சென்னை பட்டினப்பாக்கம் தலைமை செயலகம் வெற்றி பெறுமா?



பட்டினப்பாக்கத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலம், மீனவர்களது பூர்வீக நிலம். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு, அங்கே தலைமைச் செயலகம் கட்டலாம். கடற்கரை மணல், காற்று ஆகியவற்றின் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டடம் அமைய வேண்டும் என்பது மிக முக்கியம்.

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

செல்வாக்கு மிகுந்த ஊழல்வாதிகளின் வழக்கை விசாரிப்பது மிகவும் கடினமாக, சவாலாக உள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளதே?



ஆமாம். அவர்கள் விசாரணையை பல வழிகளில் முடக்க பார்ப்பர். பலரிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படும் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல், 'டிமிக்கி' கொடுப்பர். இதையெல்லாம் மீறி விசாரணை நடத்த வேண்டும்!

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி 'சென்னை நச்சுக்காற்று நகரமாக உள்ளது...' என்று, பா.ம.க., பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி கூறுகிறாரே?



உண்மை தான். சென்னையில் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய தலைநகர் புதுடில்லி போன்று நிலைமை மோசம் ஆகும் முன், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கேள்விகள் அனுப்ப இ - மெயில்: andumani@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us