sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!

/

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!

74


ADDED : மார் 17, 2026 05:22 AM

Google News

74

ADDED : மார் 17, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்ப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா, மும்பையில் அமித் ஷாவிடம் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., தலைமையில் தனி கூட்டணி அமைத்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் போட்டி கொடுக்க, அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டார். இதற்காக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு எனவும் அறிவித்தார். ஆனால், அதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், கரூர் உயிர் பலி சம்பவம் நடந்ததால், விஜயின் பிரசாரத்திலும் தொய்வு ஏற்பட்டது.

தி.மு.க.,வையும், அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து பேசிய நிலையில், தனித்து போட்டியிட்டு, தேர்தலில் தோல்வி அடைந்தால், அவர்களின் பழிவாங்கும் படலம் துவங்கும் என்று விஜய் அஞ்சுகிறார்.

இதற்கிடையே, பா.ஜ., தரப்பில், விஜயை வளைப்பதற்கான முயற்சிகள், அவருடைய தோழியான நடிகை த்ரிஷா வாயிலாக நடந்துள்ளன. கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்காக, டில்லியில் இரண்டு நாட்கள் விஜய் முகாமிட்டு இருந்தார்.

அதற்கு ஒருநாள் முன்பாக, மும்பை சென்ற த்ரிஷா, அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெருக்கடி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணையை முடித்து, விஜய் வீடு திரும்பியுள்ளார்.

அவரது, ஜனநாயகன் படத்தை வெளியிடுவதற்கும், நடிகை எடுத்த முயற்சிகள் பலன் அளித்துள்ளன. இதற்காக தணிக்கை குழுவினர், இன்று படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்ய உள்ளனர்.

இதேபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகன் மிதுன் வாயிலாகவும், நடிகையிடம் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக, அந்த நடிகை எடுக்கும் முடிவை எதிர்பார்த்து, த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

டில்லிக்கு அழைக்காதீர்கள்: சி.பி.ஐ.,க்கு விஜய் கடிதம்


கரூர் துயர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு மேற்பார்வையில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்க்கு 'சம்மன்' அனுப்பி, அவரை டில்லி வரவழைத்து, மூன்று முறை விசாரணை நடத்தினர். விசாரணைக்காக, கடந்த 15ம் தேதி, மூன்றாவது முறையாக, விஜய் டில்லி சென்றபோது, அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு, விஜய் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ''கரூர் துயர சம்பவம் தொடர்பாக, இனி என்னிடம், சென்னை மற்றும் தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும்'' என அவர் கோரியுள்ளார்.



விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ளனர்


விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தான், 51 விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மற்றவர்கள் பின்பற்றுகின்றனரா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், திரை உலகில் உச்சத்தில் இருந்து, அதை விட்டுவிட்டு, மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறார். அவரை, தமிழக முதல்வராக மக்கள் ஏற்றுக்கொண்டு, நல்ல வரவேற்பு தருகின்றனர். த.வெ.க., நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்வது தலைவர் மட்டுமே. சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் வரும். அதற்கு என்னிடம் பதில் இல்லை.
- செங்கோட்டையன், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,








      Dinamalar
      Follow us