sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண முறை

/

வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண முறை

வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண முறை

வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண முறை

1


ADDED : டிச 30, 2024 12:12 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு நுகர்வோருக்கு, மின்னஞ்சலில் மின் கட்டண விபரம் தெரிவிப்பது போல, வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவிலும், 'டிஜிட்டல்' முறையை மட்டும் அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; தொழிற்சாலைகளுக்கு மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.

அதன்படி, வீடுகளுக்கு மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவயாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, மின் கட்டண விபரத்தை, நுகர்வோரிடம் உள்ள கணக்கீட்டு அட்டையில் எழுதி தருகின்றனர்.

பின், அலுவலக கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர். அடுத்த சில தினங் களில், மின் கட்டண விபரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் அனுப்பப்படுகிறது.

தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு மின் இணைப்புகளில் உள்ள மீட்டர்களில், தொலைதொடர்பு கருவி பொருத்தப்பட்டு, வாரியத்தில் உள்ள, 'சர்வர்' உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, மாதந்தோறும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளிலும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை கேட்டதால், ஓராண்டாக டெண்டர் தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த பிரிவுகளுக்கு, ஒருங்கிணைந்த பில்லிங் முறையை அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதை செயல்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டண மென்பொருள், 2005ல் உருவாக்கப்பட்டது. தற்போது, நவீன வகையில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய மென்பொருள்கள் கிடைக்கின்றன.

அதற்கு ஏற்ப, உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த பில்லிங் முறை ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான முன்னோட்டமாகவும் இருக்கும்.

இதன் வாயிலாக, ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோருக்கும் மாதந்தோறும் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., வாயிலாக மட்டுமே மின் கட்டண விபரம் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us