sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அமெரிக்க விசா நேர்காணல் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

/

அமெரிக்க விசா நேர்காணல் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

அமெரிக்க விசா நேர்காணல் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

அமெரிக்க விசா நேர்காணல் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

7


ADDED : ஜன 26, 2026 07:49 AM

Google News

7

ADDED : ஜன 26, 2026 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் நாட்டில் உள்ள அமெரிக்க துாதரகங்கள், 'எச்1பி' விசாவுக்கான நேர்காணலை, 2027 வரை ஒத்தி வைத்துள்ளன. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக, கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கினார். அதன்படி, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான எச்1பி விசா கட்டணம், 89 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. மேலும், விசாவுக்கு விண்ணப்பிப்போரின் சமூக ஊடக கணக்குகள் மறு ஆய்வுக்கு கட்டாயமாக உட்படுத்தப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நம் நாட்டின் டில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க துாதரகங்களில், எச்1பி விசாவுக்கான நேர்காணல், 2027 வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும் அக்., வரை நேர்காணல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது 2027க்கு மாற்றப்பட்டுள்ளது.

விசா கிடைப்பதில் தாமதமாவதால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தாயகம் திரும்பிய இந்தியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

காரணம் என்ன?


* புதிய விதிகளின்படி, எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்போரின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதால், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அதிக நேரம் எடுக்கிறது
* இந்தியர்கள் மற்ற நாடுகளில் விசா முத்திரை பெறும் வசதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த தேவையும் இந்திய துாதரகங்களிலேயே குவிந்துள்ளன.








      Dinamalar
      Follow us