UPDATED : மே 07, 2025 06:09 PM
ADDED : மே 07, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் பின்வருமாறு:
* கோட்லி
* முரித்கே
* பகவல்பூர்
* சக் அம்ரு
* பிம்பர்
* குல்பூர்
* சியால்கோட்
* ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இரண்டு இடங்கள்
இவற்றில் இரண்டாவது இடமான முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் ஆகும். அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பகவல்பூர் என்பது பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ள ஊர் ஆகும். இந்த பகவல்பூர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

