பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்காதது ஏன்?
பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்காதது ஏன்?
ADDED : ஜன 24, 2026 02:36 AM

தொகுதி பங்கீடு குறித்து, பா.ஜ., எந்த பதிலும் சொல்லாததால், பிரமதர் மோடி பங்கேற்ற மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்கவில்லை என தெரிகிறது.
சமீபத்தில் மதுரையில் மாநில மாநாடு நடத்தி, தன் கட்சி பலத்தை, கிருஷ்ணசாமி வெளிப்படுத்தினார். தே.ஜ., கூட்டணியில் சேர, ஒரு ராஜ்யசபா எம்.பி., 10 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கி தரும்படி, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பிடம், அவர் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், மதுராந்தகத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 1996ல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு, கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். கடந்த 2011ல், அ.தி.மு.க., கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
கடந்த 2021ல், எங்களை நிராகரித்ததால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் ஓட்டு வங்கி அடிப்படையில், நாங்கள் கேட்கும் தொகுதிகளை தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து, விரைவில் முடிவெடுப்போம். எங்களைப் புறக்கணித்தால், அக்கூட்டணிக்கு வழக்கம் போல் தோல்வியே கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

