sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?'

/

'கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?'

'கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?'

'கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?'

9


ADDED : அக் 07, 2025 04:34 AM

Google News

9

ADDED : அக் 07, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணையை துவங்காதது ஏன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் உள்ள ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'புரோக்கர்கள் வாயிலாக நடந்த கிட்னி முறைகேடு கொடூரமான செயல்' என கண்டித்துள்ளது.

மேலும், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது.

ஆனால், ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை துவங்கவில்லை. அதே நேரத்தில், கரூர் துயரம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசு கைக்கு வரும் முன்பே, சில மணி நேரங்களில், ஐ.ஜி., தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு விட்டது.

இரண்டு வழக்குகளிலும், உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருக்கின்றன. ஆனால், தங்களை சேர்ந்தவர்களின் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்தி, கிடப்பில் போடுவதுடன், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால், துரித வேகத்திலும் தி.மு.க., அரசு செயல்படுகிறது. தி.மு.க.,வின் இந்த இரட்டை வேடம், தமிழக மக்களிடம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us