தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா?: ஸ்டாலின் சந்தேகம்

த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா?: ஸ்டாலின் சந்தேகம்

த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா?: ஸ்டாலின் சந்தேகம்

12


ADDED : ஜூன் 08, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

12

ADDED : ஜூன் 08, 2026 05:04 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, மூன்று மாதங்களாவது தாங்குமா,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நேற்று ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,விற்கு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில், உழைப்பதற்கு தயாராக, நாங்கள் இருக்கிறோம்.

இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி, எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம், நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே, இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில், 'புதிய ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்கு, இதைப்பற்றி பேசப் போவதில்லை' என கூறியிருந்தேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே, பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதை பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் ஆறு மாதங்கள் அல்ல; ஐந்து மாதங்கள் அல்ல; மூன்று மாதங்களாவது ஆட்சி தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான், இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.




'மொத்தத்தையும் நீங்கள் இழக்கப்போவது உறுதி'


த.வெ.க., - ஐ.டி., அணி வெளியிட்ட அறிக்கை: ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே; அதிகாரம் என்றால் தன் குடும்பத்துக்கு மட்டுமே என சிலர் இருக்கின்றனர். ஆனால், நாங்கள், ஆதரவளித்தவர்களுக்கு ஆட்சியில் பங்கையும், அதிகாரப் பகிர்வையும் அளித்தோம். கூட்டணி என்ற பெயரில், உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது, எந்த வகையில் சேரும் ஸ்டாலின் சார்? ஆட்சி கட்டில் கனவிலேயே துாங்கும் உங்களை, தொட்டிலில் போட்டு புட்டிப்பால் கொடுத்து, சுற்றி இருப்போர் ஏமாற்றுவதை அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்வது? இப்படியே இருந்தால், கொளத்துாரையும் கோட்டையையும் இழந்தது போல், மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us