sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

/

லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 06, 2011 01:02 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாரியிலிருந்து கண்ணா டிகள் சரிந்து விழுந்ததால், மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது.

கன்னியக் கோவிலில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக, வீடுகள், தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து லாரி ஒன்று புதுச்சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் சிக்னல் பகுதியைக் கடந்த போது, கண்ணாடிகளை தாங்கியிருந்த இரும்பு சேனல்கள் திடீரென உடைந்தன. இதனால், லாரியில் செங்குத்து வரிசையில் அடுக்கப்பட்டிருந்த மெகா சைஸ் கண்ணாடிகள், நடு ரோட்டில் சரிந்து விழுந்தன. துண்டுத்துண்டாக சிதறிய கண்ணாடிகள் சாலையில் சிதறியதால், போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, சாலையில் சிதறிய கண்ணாடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.








      Dinamalar
      Follow us