/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணையதள கவிதைப்போட்டி புதுவைப்பிரபாவுக்கு பரிசு
/
இணையதள கவிதைப்போட்டி புதுவைப்பிரபாவுக்கு பரிசு
ADDED : ஜூலை 14, 2011 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் புதுச்சேரி கவிஞர் இரண்டாமிடம் பிடித்தார்.ஈகரை தமிழ்க் களஞ்சியம் என்னும் இணைய தளம் உலகத் தமிழருக்கான கவிதைப் போட்டியை இணைய தளத்தில் அறிவித்தது.இப்போட்டியில் உலகின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள் பங்கேற்றனர்.
இதில், புதுச்சேரி கவிஞர் புதுவைப்பிரபா இரண்டாமிடம் பெற்றார். பிரபாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியம், 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியது.

