/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டுபாளையத்தில் கோவில் துப்புரவு பணி
/
குண்டுபாளையத்தில் கோவில் துப்புரவு பணி
ADDED : செப் 06, 2011 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண் கள் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் குண்டுபாளையம் மாரியம்மன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி நடந்தது.
கோவில் வளாகத்தில் மண்டிக் கிடந்த புதர் செடிகளை அழித்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பசுபதி, முன்னாள் கவுன்சிலர் உலக வடிவேலு பாராட்டினர். துப்புரவு முகாமில் அறங்காவலர் குழு உறுப் பினர்கள் அரிகிருஷ்ணன், பிரகாஷ், ரமேஷ், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன் செய்திருந்தனர்.