/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை
/
இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை
ADDED : செப் 02, 2024 10:04 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் அடையாளம் தெரியாத இறந்த இரண்டு முதியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி சாலை அரசு மருத்துவமனை அருகில் கடந்த 30ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் , எல்லையம்மன் கோவில் தெரு, தனியார் திருமண மண்டபம் அருகே சுமார் 65 வயது மதிக்கதக்க முதியவர், கடந்த 24ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.