ADDED : ஏப் 29, 2024 04:03 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம், : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் மதிவாணன் 33;இவர் நேற்று இரவு 8 மணியளவில் மது குடித்துவிட்டு வடக்குவெளி ரைஸ் மில் எதிரில் அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டு, பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
