ADDED : ஜூன் 19, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பள்ளிப்புதுப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நாளை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
நாளை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் வைபவமும், 21ம் தேதி மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை பள்ளிப்புதுப்பட்டு கிராம மக்கள் செய்துள்ளனர்.