/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்
/
பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்
ADDED : ஏப் 24, 2024 08:43 AM

திருக்கனுார் : செட்டிப்பட்டு காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 15ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மற்றும் பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 8:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று, சக்தி கரகத்துடன் 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் மற்றும் மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

