ADDED : மார் 14, 2025 04:44 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், புதுத்துறை, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷர்மிளா, 29. கடந்த 3ம் தேதி திருச்சியில் இருந்து, முகமது ஷர்மிளா 2 பெண்களுடன் கொழும்பு சென்றார். அங்கு அவரிடம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை கொடுத்து சென்னை நபரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
அவர், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததால் அங்குள்ள கழிவறையில் தங்கத்தை போட்டு விட்டதாக கூறினார். இதை நம்பாத தங்கம் கடத்தல் கும்பல் முகமது ஷர்மிளாவிடம் தங்கத்தை கேட்டு, மிரட்டல் விடுத்தனர். மிரட்டிய 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
