sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேன் சாலையில் கவிழ்ந்து 18 பேர் காயம்

/

வேன் சாலையில் கவிழ்ந்து 18 பேர் காயம்

வேன் சாலையில் கவிழ்ந்து 18 பேர் காயம்

வேன் சாலையில் கவிழ்ந்து 18 பேர் காயம்


ADDED : மே 13, 2024 05:14 AM

Google News

ADDED : மே 13, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: தவளக்குப்பம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

கடலுார் மஞ்சக்குப்பம், முதுநகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 18 பேர் வில்லியனுார் அடுத்துள்ள அரியூரில் நடந்த குழந்தை பெயர் சூட்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் வேனில் புறப்பட்டு சென்றனர். வேனை, கடலுார் முதுநகரைச் சேர்ந்த முகமது பயாஜ் 22; ஓட்டி சென்றார்.

தவளக்குப்பம் அடுத்துள்ள அபிஷேகப்பாக்கம் -- உருவையாறு சாலையில் தனியார் பல்கலைக்கழக கல்லுாரி அருகே வேன் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து 50 அடி துாரம் தேய்த்து சென்று நின்றது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடன் அவர்களுக்கு பின்னால் மற்றொரு காரில் சென்ற உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வேனில் சென்றவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் மற்றும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையின் குறுக்காக கிடந்த வேனை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.






      Dinamalar
      Follow us