/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது
UPDATED : மே 11, 2026 11:19 PM
ADDED : மே 11, 2026 10:21 PM
புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம், மணலிப்பட்டில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அதில், வானுார், முருக்கத்தை சேர்ந்த பார்த்திபன், 31; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், மணலிப்பட்டு, மேம்பாலம் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய விழுப்பும், இடையப்பட்டையை சேர்ந்த கோபிநாத், 32; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.

