ADDED : மே 13, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவடி சுடுகாடு அருகே, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அதில், அவர்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், பிரம்மதேசம் அடுத்த குருவம்மாப்பேட்டை பெரியசாமி மகன் அருண்ராஜ், 27; சேகர் மகன் சிவமூர்த்தி, 37; எனவும் தெரிந்தது.
உடன் போலீசார், அருண்ராஜ், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.