sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்

/

பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்

பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்

பஞ்சவடீ கோவிலில் 3 நாள் வசந்த உற்சவம்


ADDED : மே 14, 2024 04:58 AM

Google News

ADDED : மே 14, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் வரும் 17ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பட்டாபிேஷக ராமச்சந்திரமூர்த்திக்கு வசந்த உற்சவம் வரும் 17ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.

விழா நடக்கும் 3 நாட்களும் மாலை 5:00 மணியளவில், வசந்த மண்டபத்தில் சீதா பிராட்டியுடன் ராமர் எழுந்தருள்கிறார். 17ம் தேதி மாலையில், வசந்த மண்டபத்தில் ராமர் - சீதாவுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. பின், புஷ்ப பந்தலில் சேவை சாதிக்கின்றனர்.

இரண்டாம் நாளான 18ம் தேதியன்று மாலை, திருமஞ்சனத்தை தொடர்ந்து பழப்பந்தலில் சேவை சாதிக்கின்றனர்.

விழாவின் மூன்றாம் நாளான 19ம் தேதியன்று காலை 10:00 மணியளவில், சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

மாலையில் வசந்த மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனமும், தொடர்ந்து காய்கறிகள் பந்தலில் சீதா - ராமர் சேவை சாதிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us