sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி விடுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

/

புதுச்சேரி விடுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

புதுச்சேரி விடுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

புதுச்சேரி விடுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை


ADDED : ஆக 10, 2024 04:40 AM

Google News

ADDED : ஆக 10, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல், கொத்தனார் முதல் சந்தை சேர்ந்தவர் சந்திரசேகர்,60; நகை செய்யும் தொழிலாளியான இவர் தனது மனைவி சரஸ்வதி,55; மகன் சுதர்சன்,25; மகள் சவுந்தர்யா,23; ஆகியோருடன் கடந்த, 7ம் தேதி இரவு, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.

அன்று இரவு புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பீனிக்ஸ் ரெசிடென்சியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் அவர் அறையை .'செக் அவுட்' செய்ய முயன்றபோது, கனமழை பெய்தது. அதனால் அறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து அங்கேயே தங்கினார்.

நேற்று 'செக் அவுட்' நேரம் முடிந்ததால் பகல் 12:30 மணிக்கு, விடுதி ஊழியர்கள், சந்திரசேகர் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்திரசேகர், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய 4 பேரும் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, கலைவாணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்திரசேகரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us