sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

8,965 மீனவ முதியோர்களுக்கு ரூ.4.98 கோடி வங்கியில் வரவு

/

8,965 மீனவ முதியோர்களுக்கு ரூ.4.98 கோடி வங்கியில் வரவு

8,965 மீனவ முதியோர்களுக்கு ரூ.4.98 கோடி வங்கியில் வரவு

8,965 மீனவ முதியோர்களுக்கு ரூ.4.98 கோடி வங்கியில் வரவு


ADDED : மே 04, 2024 07:09 AM

Google News

ADDED : மே 04, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இரண்டு மாத பென்ஷன் தொகையாக 8,965 மீனவ முதியோர்களுக்கு 4.98 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மீனவ சமுதாய குடும்பங்களுக்கு முதியோர் பென்ஷன், மீன்வளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. 50 முதல் 59 வயதிற்குட்பட்ட மீனவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய், 60 முதல் 79 வயது வரை 3 ஆயிரம், 80 வயதிற்கு மேல் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்தொகை லோக்சபா தேர்தல் காரணமாக மார்ச் மாதம் வழங்கவில்லை. சமூக நலத்துறையில் தேர்தல் நேரத்திலும் முதியோர் பென்ஷன் தடையின்றி வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்தும் கூட மீனவர் நலத்துறையில் தேர்தல் விதிகளை காட்டி முதியோர் பென்ஷன் இரண்டு மாதமாக பென்ஷன் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரண்டு மாதங்களுக்கான பென்ஷன் தொகை நேற்று வங்கி கணக்கில் வரவு வைத்து மீன்வளத்துறை உத்தரவிட்டது.

இது குறித்து மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் செய்திக்குறிப்பு:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மாதந்தோறும் மீனவ முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையானது மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மொத் தம் 4 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 8,965 பேர் பயனடைவர்.






      Dinamalar
      Follow us