/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது
/
பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது
ADDED : மே 01, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், :திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பொது இடத்தில் மது அருந்தி கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட சோரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜசேகர், 34; சோம்பட்டு சந்தோஷ்குமார், 23; விழுப்புரம் பிரகாஷ், 28; குமார், 49, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதாக குமாரப்பாளையத்தை சேர்ந்த ரவி, 42; கருவடிக்குப்பம் சிலம்பரசன், 36, ஆகியோரை கைது செய்தனர்.

