/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை தாக்கி மிரட்டிய 3 பேர் மீது வழக்குப் பதிவு
/
பெண்ணை தாக்கி மிரட்டிய 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : மே 24, 2024 04:16 AM
புதுச்சேரி: கணவருடன் பேசிய பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் ராஜவில்சுஜி,38; இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த அன்பரசன், என்பவர் அந்த பெண்ணிடம் பேசி வந்தார். அதனை அன்பரசன் மனைவி முக்தா, நேற்று ராஜவில்சுஜியின் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அதில், ஆத்திரமடைந்த, முக்தா மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து, ராஜவில்சுஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து முக்தா உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.