ADDED : மே 20, 2024 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்,: காரைக்காலில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இருக்கையை துாக்கி அடித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் அம்பகரத்துார் தலையாரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் உத்திராபதி மகன் முருகேசன், 39; கொத்தனார்.
இவர் நேற்று முன்தினம் அம்பகரத்துார் காளி ஒயின்ஸ் பாரில் மது அருந்துபோது , வேடம் தோப்பு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் செல்வம், ஏன்டா சத்தம் போட்டு பேசுற எனக் கூறி பிளாஸ்டிக் சேரைச் எடுத்து முருகேசன் முகத்தில் தாக்கினார்.
இதில் காயமடைந்த முருகேசனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் செல்வம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

