ADDED : ஆக 20, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் மழலையர் செயல்பாட்டு அறை திறப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
பள்ளித் துணை ஆய்வாளர் (வட்டம் -1) குலசேகரன் தலைமை தாங்கி, மழலையர் செயல்பாட்டு அறை, பள்ளியின் புதிய பெயர்பலகை திறத்து வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, பெல்ட், அடையாள அட்டை மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார். பள்ளிக்கு புதிய பெயர் பலகை அமைத்துக் கொடுத்த தனசேகரன் வாழ்த்தி பேசினார்.
ஏற்படுகளை தலைமை ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.