sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்

/

தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்

தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்

தாயை தொலைத்து தவித்த சிறுமி; கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ்


ADDED : மே 28, 2024 11:46 PM

Google News

ADDED : மே 28, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக தவித்த 6 வயது சிறுமியை, அவரது தாயை கண்டறிந்து போலீசார் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, 6 வயது சிறுமி தனது தாயை பிரிந்து தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அவரை, பொதுமக்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடலுாரைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்துடன் கடற்கரை வந்ததாக தெரிவித்தார். தொலைபேசி எண்கள் ஏதும் தெரியவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் கடற்கரைக்கு அனுப்பி, சிறுமியின் பெற்றோரை கண்டறிய உத்தரவிட்டார்.

போலீஸ் தேடலில் சிறுமியின் தாய் கடலுார் செரீனாபேகம் கண்டறியப்பட்டார். போலீஸ் நிலையம் வரவழைத்து உரிய விசாரணைக்கு பிறகு சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

போலீசாருக்கு நன்றி தெரிவித்து சிறுமி மற்றும் அவரது தாய் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us