sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

/

பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்


ADDED : மே 10, 2024 12:51 AM

Google News

ADDED : மே 10, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் மற்றும் வில்லியனுார் தாலுகாவில் நடைபெற உள்ள சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாமில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு, சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து வில்லியனுார் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 13ம் தேதி வில்லியனுார் குறுவட்டம் கோட்டைமேடு விவேகானந்தர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 15ம் தேதி அரும்பார்த்தபுரம் திரு.வி.கா. அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 17ம் தேதி தொண்டமாநத்தம் குறுவட்டம் கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18ம் தேதி கொடத்துார் குறுவட்டம் காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதேபோல், பாகூர் தாலுகா நெட்டப்பாக்கம் குறுவட்டம் கம்பன் அரச மேல்நிலைப்பள்ளியில் 13ம் தேதியும், மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15ம் தேதியும், ஏம்பலம் மறைமலை அடிகள் மேல்நிலைப்பள்ளியில் 17ம் தேதியும், கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 18ம் தேதியும் சிறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் நடக்கிறது.

எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us