/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்கில் இருந்து விழுந்த மாணவர் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த மாணவர் பலி
ADDED : ஏப் 03, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்த பொறியியல் கல்லுாரி மாணவர் இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த கோழிந்தராபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அன்பரசன், 22; பொறி யியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று நண்பர்களுடன் மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்று ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் திருக்கோவிலுார் திரும்பினார்.
செஞ்சி அடுத்த புத்தகரம் பகுதியில் அதிவேகமாக வந்தபோது, வேகத்தடை மீது ஏறியதில் நிலை தடுமாறி விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந் தார். நல்லாண்பிள்ளை பெற் றாள் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

