ADDED : ஆக 05, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் முத்தாலம்மன் கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.
பாகூரில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (7ம் தேதி) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.
இதனையொட்டி, இன்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு கலச ஸ்தாபனம் நடக்கிறது. 7ம் தேதி காலை 7 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணமும், 9 மணிக்கு வளையல் அணிவித்தல் மற்றும் சோடஷ உபசாரத்தடன் மகா தீபாரதனை நடக்கிறது. 9.30 மணிக்கு பாததாங்கியுடன் அம்மன் வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.