sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குவியும் நில மோசடி வழக்குகள் மாஜி சப்ரிஜிஸ்டர் 'எஸ்கேப்'

/

குவியும் நில மோசடி வழக்குகள் மாஜி சப்ரிஜிஸ்டர் 'எஸ்கேப்'

குவியும் நில மோசடி வழக்குகள் மாஜி சப்ரிஜிஸ்டர் 'எஸ்கேப்'

குவியும் நில மோசடி வழக்குகள் மாஜி சப்ரிஜிஸ்டர் 'எஸ்கேப்'


ADDED : மார் 09, 2025 03:32 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து பி.சி.எஸ்., அதிகாரிகள் ரமேஷ், பாலாஜி, சப்ரிஜிஸ்டர் சிவசாமி உள்பட 17 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரி பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஆய்வில், வாரிசு இல்லாதவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டிற்கு சென்று தங்கியவர்களின் சொத்துக்களை கண்டறிந்து 32 உயில்களை திருத்தி, போலி உயில் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மோசடியாக விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. முதற்கட்டமாக 9 போலி உயில் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. காமாட்சியம்மன் கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்து உடல்நல பிரச்னைக்காக இடைக்கால ஜாமீன் பெற்ற சப்ரிஜிஸ்டர் சிவசாமி மீது மீண்டும் ஒரு மோசடி வழக்கு பதிவானது.

ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த இறந்த பிரியா என்பவரின் நிலத்திற்கு, ஆள்மாறாட்டம் செய்தும், வாரிசு என்ற பெயரில் ஒருவரை உருவாக்கி இரு தரப்பு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தனர். இரு தரப்பைச் சேர்ந்த 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி வழக்கிலும், மாஜி சப்ரிஜிஸ்டர் சிவசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுதவிர மேலும் சில நில மோசடி புகார்களும் சிவசாமி மீது பதிவாகி உள்ளது. இதனால் மாஜி சப்ரிஜிஸ்டர் சிவசாமியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., தனிப்படை அமைத்து தேடி வருகிறது.

போலீஸ் விசாரணையில், சிவசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்பே மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்து வடமாநிலத்திற்கு குடியேறி இருப்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us