sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை; சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

/

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை; சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை; சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை; சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை


ADDED : செப் 18, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: பந்த் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்த செய்ய கோரி, இண்டியா கூட்டணி இன்று 18ம் தேதி பந்த் போராட்டம் அறிவித்துள்ளது. பந்த் போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில், எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், வீரவல்லவன், லட்சுமி சவுஜன்யா, வசம்சிதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா பேசுகையில், 'பந்த் போராட்டத்தின்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ், ஆட்டோ, டெம்போ போக்குவரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்காக இயக்கப்படும் அரசு சிறப்பு பஸ்களுக்கு எவ்வித தடையும் ஏற்பட கூடாது. ஸ்பெஷல் பிராஞ்ச் அறிக்கையை பெற்று அந்தந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us