ADDED : ஏப் 16, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 33ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை 7:30 மணிக்கு ஹோமம் லச்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சந்தான காப்பு அலங்காரம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் திருக்கல்யாண உற்சவமும், மாலை 6:00 மணிக்கு குளக்கரை சுற்றியிலும் லட்ச தீப ஏற்றப்பட்டது.
விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

