/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 05, 2024 09:57 PM

புதுச்சேரி: இந்திரா காந்தி கலை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராஜிவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி சதுக்கம் அருகில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் கிஷோர் ஜான் தலைமை தாங்கினார்.
மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவவர் சதிஷ் குமார் முன்னலை வகித்தார். நாட்டு நலப்பணிதிட்ட தன்னார்வலர்கள், போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பாதகை மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தார்.