கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 09, 2024 09:12 PM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி பவானி 500 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி ஷாமினி 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் தினேஷ்குமார் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பள்ளியில் கணினி பயன்பாடு பாடத்தில் அனைத்து மாணவர்களும் நுாறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி துணை முதல்வர் சித்ரா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
