தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவளக்குப்பத்தில் பேனர் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

தவளக்குப்பத்தில் பேனர் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

தவளக்குப்பத்தில் பேனர் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதம்


ADDED : ஜூலை 04, 2024 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் சந்திப்பில் சுப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், சுப நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவளக்குப்பம் பகுதியில் பேனர்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். சுப நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பேனரையும் விட்டு வைக்காமல் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

அதையடுத்து, சுப நிகழ்ச்சியை நடத்திவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிகழ்ச்சி, முடிவதற்குள் ஏன் பேனரை அகற்றுகிறீர்கள் என, கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த, தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us