ADDED : செப் 13, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கொடாத்துாரில் மது போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கொடாத்துார் பஸ் நிறுத்தம் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட தமிழக பகுதியான குராம்பாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த குணா, 20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.