sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

/

ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

ஜிம் பயிற்சியாளரை கொலை செய்தது ஏன் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்


ADDED : ஜூன் 01, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜிம் பயிற்சியாளர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி (எ) மணிகண்டன், 35: ஜிம் பயிற்சியாளர்.

கடந்த 29ம் தேதி அப்பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விக்கியை ஒரு கும்பல் கல்லால் அடித்து கொலை செய்தது.

இதுதொடர்பாக, திப்புராயப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், 33; ஸ்ரீகாந்த், 28; வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த அசோக், 36; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். இவர்களில், அசோக் மீது, ஏற்கனவே 2 கொலை வழக்குகளும், கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் மீது, அடிதடி வழக்குகள் உள்ளன.

கொலைக்கான காரணம் குறித்து இவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சாமிநாதன் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற விக்கி மற்றும் அசோக் இருவரும், இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகில் பீர் குடித்தனர்.

அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் மற்றும் சிறுவன் ஒருவனும் பீர் குடித்தனர். 2 பாட்டில் பீர் குடித்ததும் விக்கிக்கு போதை அதிகமானது. அப்போது, மற்றவர்கள், '2 பீருக்கே மட்டையாகி விட்டாயே... நாங்கள் 5 பீர் கூட சாதாரணமாக குடிப்போம்' என கூறினர். அப்போது ஒருவர், விக்கியை தகாத வார்த்தையால் திட்டினார்.

ஆத்திரமடைந்த விக்கி, 4 பேரையும் சரமாரியாக தாக்கினார். உடன் 4 பேரும், 'எங்களையே அடிக்கிறாயா' எனக்கேட்டு, கல்லால் நெற்றி பொட்டில் தாக்கியதில் விக்கி மயங்கி விழுந்ததும் தலையில் கிரானைட் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மூவரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை, சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us