/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது
/
பொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது
ADDED : மே 08, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, முள்ளோடை சந்திப்பில் சாலையில், ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் தாழங்குடா சுனாமி நகரை சேர்ந்த ஜெகதீஷ் 34; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.