ADDED : ஆக 22, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 51; கொத்தனார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சசிகுமார், என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
நேற்று முருகன் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்ற போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த, சசிகுமார், அவதுாறாக பேசி, முருகனை தாக்கினார். காயமடைந்த, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சசிகுமாரை தேடி வருகின்றனர்.