/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா, போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
/
கஞ்சா, போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
கஞ்சா, போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
கஞ்சா, போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
ADDED : மே 01, 2024 01:08 AM
அரியாங்குப்பம், : கஞ்சா போதைப் பொருட்களை தடுப்பது குறித்து இளைஞர்கள், பொதுமக்களுக்கு அரியாங்குப்பம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரியில் பெருகி வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது, செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், அரியாங்குப்பம், சுப்பையா நகர், சண்முகா நகர், பி.சி.பி., நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதியில் இளைஞர்கள், பொதுமக்களிடம் கஞ்சா போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சந்தேகப்படுவர்கள் யாராவது ஊருக்குள் போதைப் பொருட்கள் விற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.