/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
/
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
ADDED : ஏப் 30, 2024 05:22 AM

கிழக்கு பிரிவு போலீஸ் புது முயற்சி
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு பிரிவு போலீஸ் நிலையங்கள் சார்பில் கஞ்சா மற்றும் போதை பொருளுக்கு எதிரானவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கிழக்கு பிரிவின் கீழ் உள்ள ஒதியஞ்சாலை, பெரியக்கடை, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை போலீஸ் நிலைய சார்பில் நேற்று போதை பொருளுக்கு எதிரானவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் நடந்த நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், செந்தில்குமார், ஜெய்சங்கர், கிட்லா சத்தியநாராயணன் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், குற்ற சம்பவங்கள், கஞ்சா வைத்திருந்தால் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து விளக்கி கூறினர்.
அதைத் தொடர்ந்து, பள்ளி கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பம், கராத்தே சாகசம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது.
சப்இன்ஸ்பெக்டர்கள் முருகன், குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

