/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
/
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
ADDED : மே 16, 2024 10:56 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இதயா மகளிர் கல்லுாரியில் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லுாரியில் சைபர் கிரைம் குற்றங்களை கல்லுாரி மாணவிகள் எவ்வாறு எதிர் கொள்வது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சுவிட்லின், கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சக்கரவர்த்தி பங்கேற்று, சைபர் கிரைம் குற்றங்கள், எப்படி நடக்கிறது. அந்த குற்றங்களில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது. சைபர் குற்றங்களில் சிக்காமல் இருப்பது போன்றவற்றை குறித்து, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில், ஆங்கிலம், கணித துறை மாணவிகள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கல்லுாரி உதவி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

